For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதியின் உருவபொம்மை எரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின் உருவபொம்மையை போராட்டத்தில் ஈடுபட்டவழக்கறிஞர்கள் எரித்தனர்.

வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட நடத்தை விதிகளை விலக்கிக் கொள்ள வேண்டும், தலைமை நீதிபதியை மாற்ற வேண்டும்என்று கோரி வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது நீதிமன்றத்துக்குள்இருந்த வழக்கறிஞர்களை வெளியே வருமாறு அழைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர்தாக்கப்பட்டார்.

தாக்குதல் குறித்து உயர்நீதிமன்றப் போலீசில் கிருஷ்ணமூர்த்தியும், உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் சம்பத்குமாரும் போலீஸில்புகார் கொடுத்தனர். புகாரில், தலைமை நீதிபதியின் உருவ பொம்மையை வழக்கறிஞர்கள் எரித்ததாகவும், போராட்டத்தைப் படம்பிடிக்க உயர்நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படக்காரரின் காமிரா சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர்கள் கருப்பன், பிரேம்நாத், இமானுவேல் உள்ளிட்ட பலர் மீது புகார் தரப்பட்டது. இதையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கு தமிழக நீதிபதிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X