இந்திரகுமாரி விடுதலைக்கு எதிரான மனு ஏற்பு
சென்னை:
இலவச செருப்பு ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி விடுதலை செய்யப்பட்டதைஎதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி மாணவ-, மாணவிகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் ரூ.1.19 லட்சம்ஊழல் செய்ததாக அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி, நிதி அமைச்சர் நெடுஞ்செழியன்உள்பட 21 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் இந்திரகுமாரி உள்படஅனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் இந்திர குமாரி விடுதலை செய்யப்பட்டவுடன், அதை எதிர்த்துதமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி ராமலிங்கம் அறிவித்தார். மேலும் இந்திரகுமாரி உள்பட வழக்கில்சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications