உலகின் 3வது அதிகாரம் வாய்ந்த பெண் சோனியா
நியூயார்க்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, உலகின் 3வது மிகவும் அதிகார பலம் வாய்ந்தபெண்மணியாக போர்ப்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம்செலுத்துவோர் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த இதழ் தேர்வுசெய்துள்ள 100 அதிகாரம் மிக்க பெண்மணிகள் குறித்த விவரம்:
அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் காண்டலீஸா ரைஸ் தான் உலகின் அதிகாரம் மிக்க முதல்பெண்மணி. அடுத்த இடத்தில் இருப்பது சீனத் துணை அதிபர் வூ யி.
அதற்கு அடுத்தபடியாக அதிகாரம் கொண்ட பெண்மணி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான்.இவருக்கு அடுத்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாராவும், முன்னாள்அதிபர் கிளின்டனின் மனைவியும் செனட்டருமான ஹில்லாரி கிளிட்டன் ஆகியோரும் உள்ளதாகத்தெரிவித்துள்ளது.
இந்த நூறு பேர் பட்டியலில் இந்தோனேஷிய அதிபர் மேகாவதி சுகர்னோபுத்ரி 8ம் இடத்தையும்,பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியா அரோயோ 9வது இடத்தையும், வங்கதேச அதிபர் கலீதா ஜியா14வது இடத்தையும், இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா 44வது இடத்தையும், மியான்மார்ஜனநாயகப் போராட்டவாதி ஆங் ஷான் சூ கி 45வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
57 வயதான சோனியா காந்தி, பிரதமர் பதவி ஏற்க மறுத்ததன் மூலம் இந்திய மக்களிடையே பெரும்அன்பைப் பெற்றுவிட்டார். இந்தியாவில் இப்போது சோனியைவிட அதிகமாக மதிக்கப்படும் பெண்யாரும் இல்லை என்று போர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் (21வது இடம்), பிரிட்டிஷ் பிரதமர் டோனிபிளேரின் மனைவி செர்ரி (12 வது இடம்), ஜோர்டன் நாட்டு அரசி (13 வது இடம்), பிரிட்டிஷ்அரசி எலிசபெத் (22வது இடம்) ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
-
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம்












Click it and Unblock the Notifications