தமிழக மீன்பிடி கப்பல் மூழ்கி 12 பேர் பலி
விசாகபட்டிணம்:
சென்னையைச் சேர்ந்த
தனியார் மீன் பிடி நிறுவனத்தைச் சேர்ந்த இந்தக் கப்பல் ஹால்டியா துறைமுகத்தில் இருந்து 80 கடல் மைல்தொலைவில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.
அதில் தலைமை கப்பலின் கேப்டன் வின்சென்ட், துணை கேப்டன் செல்வின்ராஜ் மற்றும் அந்தோணி தாஸ்,போஸ்கோ, குமார், ஜீத், பிரசன்னா, வர்கீஸ், ஜோசப், அருள், குரூஸ், நஜரானே, குமார் உள்பட 13 மீன்பிடிவல்லுனர்கள் இருந்தனர்.
நள்ளிரவில் நங்கூரம் பாய்ச்சி மீன் பிடிக்கும் பணியில் இக் கப்பல் ஈடுபட்டிருந்தபோது பயங்கர காற்று வீசியது.இதில் கப்பல் தள்ளாடியது. இதையடுத்து ஹால்டியா துறைமுகத்துக்கு கேப்டன் உதவி கோரி தகவல் தந்தார்.
இதையடுத்து உடனடியாக மீட்புக் கப்பல்கள் அங்கு விரைந்தன. ஆனால், அதற்குள் அந்த சென்னை கப்பல்கவிழ்ந்து போயிருந்தது. ஜீத் என்பவரைத் தவிர வேறு யாரையும் காணவில்லை. ஜீத் மட்டும் உயிர் காக்கும்மிதவையின் உதவியால் மிதந்து கொண்டிருந்தார்.
மற்றவர்கள் அனைவரும் கடலில் மூழ்கிவிட்டதாக அஞ்சப்படுகிறது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில்கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications