For Daily Alerts
Just In
கார் விபத்தில் டிஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பாலத்தின் மீது கார் மோதி அதில் பயணம் செய்த டி.எஸ்.பி மற்றும் இரு இன்ஸ்பெக்டர்கள் பலியாயினர்
ராஜபாளையம் டி.எஸ்.பியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, தேனி டி.எஸ்.பி. சுப்பிரமணியன், ஆண்டிப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன், தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலமுத்து ஆகியோர் ஒரு காரில் தேனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பழனியில் ஒரு இடத்துக்குச் சென்றுவிட்டு, தேனி நோக்கி புறப்பட்டனர்.
ஒட்டன்சத்திரம் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நங்காளசி ஆற்றுப் பாலத்தின் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே சுப்பிரமணியனும் பாலமுத்துவும பலியாயினர்.
கண்ணன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
Comments
Story first published: Tuesday, August 24, 2004, 5:30 [IST]