சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஜெயலட்சுமி
மதுரை:
தன்னை போலீஸ் அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து செக்ஸ்ரீதியில் துன்புறுத்தியது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஜெகஜால ஜெயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்
மதுரை உயர் நீதிமன்றத்தில் தன்னுடன் தொடர்பு வைத்திருந்த 30 போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை வாக்குமூலமாக அளித்தார் ஜெயலட்சுமி. அதில் ஏட்டையாவில் ஆரம்பித்து டிஎஸ்பிக்கள் வரையிலான போலீசார், அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தன் வாழ்க்கையை சின்னாபின்னாவாக்கிய போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தனக்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வாங்கித் தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
என்னை கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு சென்ற போலீசார், செக்ஸ் தொல்லைகளால் சித்திரவதை செய்தனர். இதையடுத்து அவர்களது லஞ்சப் பணத்தை முதலீடு செய்ய என்னைப் பயன்படுத்தினர்.
கடைசியில் என்னை அடைவதில் இரு இன்ஸ்பெக்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தான் பண விவகாரமாக வெடித்து, இறுதியில் என்னைக் கடத்திச் செல்லும் அளவுக்குப் போனது என்று கூறியுள்ளார் ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் கூறுகையில், ஜெயலட்சுமிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளதாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications