கும்பகோணம்: அனுமதியின்றி வந்த ஹெலிகாப்டர்
கும்பகோணம்:
கும்பகோணம் அரசுக் கல்லூரி மைதானத்தில் அனுமதியில்லாமல், திடீரென ஒரு ஹெலிகாப்டர்தரையிறங்கி பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரைச் சேர்ந்த அனிதா, திவான் ஆகியோர் ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்குச்செல்ல ஹெலிகாப்டரில் கும்பகோணம் வரத் திட்டமிட்டனர்.
இதற்காக பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஏர் நிறுவன ஹெலிகாப்டரை ரூ. 1.5 லட்சத்துக்குவாடகைக்கு அமர்த்தினர். இதையடுத்து ஹெலிகாப்டரை கும்பகோணம் கல்லூரியில் தரையிறக்கஅந்த நிறுவனம் மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பியது.
ஆனால், அந்த அனுமதி தரப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்ட விவரம் பேக்ஸ் மூலம்ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.
இந் நிலையில் காலை 9.40 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் திடீரென அரசு கல்லூரி மைதானத்தில்வந்திறங்கியது. அதில் வந்த திவான், அனிதா ஆகியோர் காரில் திருநாகேஸ்வரம் புறப்பட்டுச்சென்றனர்.
அனுமதியில்லாமல் ஹெலிகாப்டர் கல்லூரியில் இறங்கிய விவரம் தெரியவந்ததும் அதிகாரிகளும்போலீசாரும் அறங்கு விரைந்தனர். பைலட்டிடம் அவர்கள் விசாரணை நடத்தியபோது, அனுமதிமறுக்கப்பட்ட பேக்ஸ் கடிதம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றார்.
இதற்கிடையே திருநாகேஸ்வரம் சென்று திரும்பிய திவான் மற்றும் அனிதா ஆகியோர்அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர்.
முதலில் பிற்பகலில் கும்பகோணம் வரத் திட்டமிட்டிருந்த அவர்கள், காலையிலேயேவந்துவிட்டதாகவும், இந்த இடைவெளியில் தான் அனுமதி மறுக்கப்பட்ட பேக்ஸ் கடிதம்பெங்களூருக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து பைலட் மற்றும் அதில் வந்தவர்களிடம் விளக்கக் கடிதத்தை வாங்கிக் கொண்டுஹெலிகாப்டர் மீண்டும் பெங்களூர் செல்ல அதிகாரிகள் அனுமதி தந்தனர்.