முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியா வெளியேற்றம்
ஆம்ஸ்டர்டாம்:
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஹாலந்தில் நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியா , ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவதுபோட்டி, மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில், இன்று ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் மோதுவதாக இருந்தது. ஆனால் கனத்த மழை காரணமாக இன்றும் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் மோதும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் 9 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 6 புள்ளிகளுடனும், இந்தியா 3 புள்ளிகளுடனும் உள்ளது.
ஆசியக் கோப்பைக்கான ஒரு நாள் தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று தோற்ற இந்தியா, முத்தரப்பு கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்குமுன்னரே வெளியேறியுள்ளது.












Click it and Unblock the Notifications