14ஐ மணந்த 15: கற்பழிப்பு வழக்கு பதிவு
சென்னை:
14 வயது மாணவியை திருமணம் செய்து, உடலுறவும் வைத்துக் கொண்ட 15 வயது சிறுவனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த சிவா (15) மற்றும் மதுரவயலைச் சேர்ந்த 14 வயதான கலைவாணி ஆகியோர்ஒரே பள்ளியில் படித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களாகக் காணவில்லை. பள்ளிக்குச் சென்ற இருவரும் வீடுதிரும்பவில்லை. இது குறித்து மதுரவயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கலைவாணி சமீபத்தில் வயதுக்கு வந்துள்ளார். இந் நிலையில் இருவரும் நேற்றிரவு திருப்பதியில் இருந்துகோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களை சந்தேகத்தின்பேரில் கோயம்பேடு போலீசார் கைதுசெய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இருவரும் காதலித்து வந்ததாகவும், பருவமடைந்த கலைவாணிக்கு கடந்த வாரத்தில் சிவா ஒரு கோவிலில் வைத்துதாலி கட்டியதாகவும், பின்னர் அப்படியே திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்யச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அங்கு விடுதியில் தங்கி கலைவாணியுடன் உடலுறவும் வைத்துள்ளார் சிவா. இதில் கலைவாணிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுவிடவே, அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மேலும சிகிச்சை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து மீண்டும்சென்னை வந்தபோது இருவரும் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.
மைனர் பெண்ணான கலைவாணியுடன் சிவா செய்த திருமணம் செல்லாது என்பதால், அவன் மீது கடத்தல்,முறையற்ற திருமணம், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.