For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழிலதிபர்கள் தொடர்புகளை அம்பலமாக்கும் ஜெயலட்சுமி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jayalakshmiகாவல்துறை அதிகாரிகளுடனான தனது செக்ஸ், தொழில், இத்யாதி தொடர்புகளை முதல் வாக்குமூலத்தில் போட்டு உடைத்தஜெயலட்சுமி தனது இரண்டாவது வாக்குமூலத்தில் பல தொழிலதிபர்களின் லீலைகளை அம்பலப்படுத்த இருப்பதாகத் தெரிகிறது.

ஜெயலட்சுமி தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீஸ் அதிகாரிகள் மீது இலாகா பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. ஜெயலட்சுமியின் முதல் வாக்குமூலம் காவல்துறையைக் கதிகலங்க வைத்துள்ள நிலையில், அவரது 2-வதுவாக்குமூலமும் தயாராகி வருகிறது.

இந்த 2-வது வாக்குமூலத்தில் பல தொழில் அதிபர்கள் ஜெயலட்சுமியுடன் நடத்திய லீலைகள் அம்பலமாக உள்ளன. இதைத்தயாரிக்கும் பணியில் ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்ததொழில் அதிபர்களும், வியாபாரிகளும் கலக்கமடைந்துள்ளனர்.

நாளை மறுநாள் ஜெயலட்சுமி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அப்போது அவரது அடுத்த வாக்குமூலம் தாக்கலாகலாம்என்று தெரிகிறது.

அதே தினத்தில் அவரது தந்தை அழகிரிசாமியும் தனியாக ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்கிறார். இதிலும் காவல்துறைஅதிகாரிகள் ஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்திச் சென்று அடித்து, உதைத்து தொடர்பான விவரம் கூறப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X