For Quick Alerts
For Daily Alerts
Just In
மேட்டூர் அணையில் கூடுதல் நீர் திறப்பு: ஜெ.
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து சம்பா பயிர்களுக்கு கூடுதல் நீர் திறந்து விடப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணையிலிருந்து காவி-ரிப் பாசனப் பகுதியில் பயி-ரிடப்பட்டுள்ள சம்பாபயிர்களுக்கு வி-நாடிக்கு 12,000 கன அடி நீர் தற்போது திறந்து விடப்பட்டு வருகிறது. இதை வி-நாடிக்கு 16,000 கன அடி நீராக அதிக-ரிக்கஉத்தரவிட்டுள்ளேன்.
செப்டம்பர் 30ம் தேதி வரை மேட்டூர் அணையிலிருந்து காவி-ரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இது ஏற்கனவேஅறிவிக்கப்பட்டிருந்த கால அளவான 2 மாதத்திற்கும் கூடுதலாகும்.
கடைமடைப் பகுதி விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும் வகையில் கடந்த 18ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை வி-நாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
Comments
Story first published: Friday, August 27, 2004, 5:30 [IST]