பெங்களூரில் 68 தமிழ்ப் பட திரையரங்குகள் மூடல்
பெங்களூர்:
கர்நாடகத்தில் தமிழ் உள்ளிட்ட புதிய பிற மொழிப் படங்களை உடனடியாக ரிலீஸ் செய்யவிதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து பெங்களூரில் உள்ள 68 திரையங்குகள் இன்று முதல்மூடப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை தமிழ், ஆங்கிலப் படங்களைத் திரையிடும் தியேட்டர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. தமிழ்ப் படங்களை வெளியிடாவிட்டால் தியேட்டர் நடத்துவதே கஷ்டம்என்பதால் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வந்துள்ளனர்.
கன்னடம் தவிர்த்து பிற மொழிப் படங்கள் அந்தந்த மாநிலங்களில் ரிலீஸ் செய்யப்பட்ட 7 வாரம்கழித்தே கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என நடிகர் ராஜ்குமார் தலைமையில் போராட்டம்நடத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கைக்கு கர்நாடக அரசு பணிந்துள்ளது. இதனால் தமிழ் உள்பட பிற மொழிப்படங்களை வெளியிட முடியாமல் வினியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில திரையங்குகள் தடையையும் மீறி தமிழ்ப் படங்களை வெளியிட்டன. ஆனால், பாதுகாப்புபிரச்சனை வந்ததையடுத்து அவை எடுக்கப்பட்டுவிட்டன.
இந் நிலையில் 7 வாரத்துக்கு முன் வந்த தமிழ்ப் படங்கள் அல்லது கன்னடப் படங்களை மட்டுமேதிரையிட வேண்டிய நிலைமைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கன்னடப் படங்களைத் திரையிட்டால் தியேட்டர்களில் ஆபரேட்டர் மட்டுமே இருப்பார், படம்பார்க்க யாரும் வர மாட்டார்கள் என்ற சூழல். இதையடுத்து தியேட்டர்களை மூடிவிடுவதேநஷ்டத்தைத் தவிர்க்க ஒரே வழி என்ற நிலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளனர்.
இந் நிலையில் பெங்களூரில் உள்ள 68 தியேட்டர்களை இன்று முதல் காலவரையின்றி மூடிவிடுவதுஎன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழ், தெலுங்கு, ஆங்கில, இந்திப் படங்களை திரையிடஅனுமதித்தால் மட்டுமே தியேட்டர்களைத் திறப்போம் என உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே புதிய இந்திப் படங்களின் ரிலீசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பிரதமர்மன்மோகன் சிங்கிடம் இந்தித் திரையுலகினர் மனு கொடுத்துள்ளனர்.
பெங்களூரில் மொத்தமுள்ள 115 திரையரங்குகளில் 75 திரையரங்குகள் பிற மொழிப் படங்களைமட்டுமே திரையிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications