விஜய்காந்த் ரசிகர்கள்- பா.ம.கவினர் மீண்டும் மோதல்
ஆத்தூர்:
ஆத்தூரில் நடந்த விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் பா.ம.கவினரைத் தாக்கிப் பேசிய அவரது ரசிகர்களை பாமகதொண்டர்கள் தாக்க முயன்றனர்.
ஆத்தூர் ராணிப்பேட்டை மெயின்ரோட்டில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் விஜய்காந்தின்நெருங்கிய நண்பரான இயக்குனர் லியாகத் அலி கான் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய விஜய்காந்த் ரசிகர்கள் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை மிகக் கடுமையான விமர்சித்துப்பேசினர். இதையடுத்து பா.ம.கவினர் அங்கு திரண்டனர். கூட்டத்துக்கு காரில் வந்த ரசிகர் மன்ற நிர்வாகிஒருவரைத் தாக்கி விரட்டியடித்த பா.ம.கவினர் மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்களைத் திட்டியவாரேமேடையில் ஏறினர்.
அவர்களை விஜய்காந்த் ரசிகர்களும் பதிலுக்குத் தாக்கத் தயாராகினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இதையடுத்து போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ராமதாஸைத் தாக்காமல் பேசுமாறுரசிகர்களிடம் கூறினர். இதைத் தொடர்ந்து ராமதாஸை திட்டிப் பேசுவதை அவர்களும் கைவிட கூட்டம்பதற்றத்துடன் நடந்து முடிந்தது.
நிகழ்ச்சியில் 20 பா.ம.கவினர் கட்சியில் இருந்து விலகி விஜய்காந்த் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தனர்.
பா.ம.கவுடனான மோதல் காரணமாக விஜய்காந்தின் கஜேந்திரா படம் தயாராகி ஒரு மாதம் ஆன நிலையிலும்இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. பா.ம.கவுக்கு செல்வாக்கு மிகுந்த ஏரியாக்களில்படத்தை ரிலீஸ் செய்வது சிரமம் என்பதால், கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர்.












Click it and Unblock the Notifications