கிரிக்கெட்: இங்கிலாந்து-- இந்தியா நாளை மோதல்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாட்வெஸ்ட் சாலஞ்ச் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளைதொடங்குகிறது.
3 போட்டிகள் கொண்ட இத் தொடரின் 2வது ஆட்டம் வரும் 3-ம் தேதியும் (வெள்ளிக்கிழமை), 3வது ஆட்டம் 5-ம்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த புரூஸ் ரீட்,நாட்வெஸ்ட் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியின் பந்துவீச்சுபயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 10-ம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குகிறது. இதில் டெஸ்ட் போட்டிகளில்விளையாடும் 10 நாடுகளுடன் அமெரிக்கா, கென்யா நாடுகளும் பங்கேற்கின்றன. அரை இறுதிப் போட்டிகள் 21,22ம் தேதிகளிலும், இறுதிப் போட்டி 25ம் தேதியும் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications