தமிழக சட்டசபையில் கலாம் உரையாற்றுகிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக சட்ட சபையில் உரையாற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்து தலைமையில் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,நிதியமைச்சர் பொன்னையன், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி டாக்டர் மைத்ரேயன், சட்டசபைசெயலாளர் ராஜாராமன் ஆகியோர் கலாமை டெல்லியில் சந்தித்தனர்.
அப்போது தமிழக சட்டசபையில் உரையாற்ற வேண்டும் என்று கலாமிடம் கேட்டுக் கொண்டனர். இந்த அழைப்பைஉடனடியாக ஏற்றுக் கொண்ட கலாம், அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் கூட்டத் தொரிடல் உரைநிகழ்த்துவதாக உறுதியளித்தார்.
சமீபத்தில் ஆந்திர மாநில சட்டசபையில் கலாம் உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் ஒருவர்சட்டசபை ஒன்றில் உரை நிகழ்த்தியது அதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications