கேரள முதல்வராக உம்மன் சாண்டி பதவியேற்பு
திருவனந்தபுரம்:
கேரளாவின் புதிய முதல்வராக உம்மன் சாண்டி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
முதல்வர் பதவியிலிருந்து ஏ.கே.அண்டனி விலகியதையடுத்து, புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக முதல்வர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்ததலைவர்களில் ஒருவருமான கருணாகரன் தெரிவித்திருந்தார்.
பேரவைத் தலைவர் வைக்கம் புருஷோத்தமனை முதல்வராக்க கருணாகரன் கோஷ்டி முயன்றது. ஆனால், உம்மன்சாண்டிக்கு ஆண்டனியின் ஆதரவு இருந்தது.
இந் நிலையில் காங்கிரஸ் மத்திய பார்வையாளர்களாக பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அகமத் படேஆகியோர் முன்னிலையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின்அமைப்பாளராக உள்ள உம்மன் சாண்டி போட்டியின்றி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து பிரணாப் முகர்ஜியும், அகமதுபடேலும் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
சாண்டி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆளுநர் ஆர்.எஸ்.பாட்டியாவிடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் உம்மன் சாண்டியும் 4அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.