இந்தியா- இங்கிலாந்து மோதல்: சச்சின் இல்லை
நாட்டிங்காம்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நாட்வெஸ்ட் சாலஞ்ச் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின்முதலாவது ஆட்டம் இன்று நடக்கிறது.
டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் டெண்டுல்கர்விளையாடவில்லை. அவரது காயம் முற்றிலும் குணமடையவில்லை.
ஆசியக் கோப்பை, முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆகிவற்றில் தோல்வியைத் தழுவிய நிலையில்,இந்தியா உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும்படி பேட்ஸ்மேன்கள் யாரும் முழுமையான ஆட்டத்திறனோடு இல்லை.
ஆனால் இங்கிலாந்து அணி நல்ல பார்மில் உள்ளது. அதோடு சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலம். எனவேஇந்தத் தொடர் இந்திய அணிக்கு கடும் சவாலாகவே இருக்கும்.
இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. சோனி மேக்ஸ் டிவி நேரடி ஒளிபரப்புசெய்கிறது.
போட்டி குறித்து இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், கடந்த ஆட்டங்களில் நமது பந்து வீச்சுதிருப்தியளிக்கவில்லை. அனைத்து பவுலர்களும் ஒரே நேரத்தில் சிறந்த பந்து வீச்சைத் தரத் தவறி விட்டனர்.இம்முறை புரூஸ் ரீட் அளித்த பந்து வீச்சு பயிற்சி பந்துவீச்சாளர்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்துள்ளது.இங்கிலாந்து பலமான அணி என்றாலும் பலமுறை அவர்களை நாங்கள் வென்றிருக்கிறோம் என்றார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 48 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் இருஅணிகளும் தலா 23 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்களில் முடிவு இல்லை.