For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிஐ விசாரணை கோருகிறார் ஜெயலட்சுமி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தான் குற்றம் சாட்டிய போலீஸார் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், இந்த விவகாரம் குறித்துசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலட்சுமியை தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவரது தந்தை அழகிரிசாமியால் முன்பு தாக்கல் செய்யப்பட்டஹேபியஸ் கார்பஸ் மனு மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில்ஜெயலட்சுமி ஏற்கனவே ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் 30க்கும் மேற்பட்ட காவல்துறைஅதிகாரிகளுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை விளக்கினார்.

இந் நிலையில் இன்று நடந்த விசாரணையின்போது ஜெயலட்சுமி ஆஜர் செய்யப்பட்டார். அப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏட்டு கண்ணன் ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள்,தற்போது ஜெயலட்சுமியைக் கண்டுபிடிப்பதற்கான ஹேபியஸ் கார்பஸ் மனு மீது விசாரணை நடந்துகொண்டுள்ளது.

இதன்படி ஜெயலட்சுமி கண்டுபிடிக்கப்பட்டு விட்டார். கடத்தியவர்களையும் போலீஸார் கைது செய்து சிறையில்அடைத்து விட்டனர். எனவே இந்த வழக்கை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று வாதாடினர்.

இதற்கு ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் அழகர்சாமி ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில், போலீஸ்அதிகாரியாலேயே ஜெயலட்சுமி கடத்தப்பட்டார் என்பதை நிரூபிக்கத் தான் இந்த வழக்கு நடக்கிறது.ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த போலீசாரின் முழு விவரங்கள் வெளியாகி, நிரூபணமாகும் வரை இந்தவழக்கை முடிக்க வேண்டியதில்லை.

இந்த வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்த முதலாவது வாக்குமூலத்தில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள்மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இதில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் மீது தமிழக காவல்துறை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்களுக்கு தமிழக காவல்துறை மீது நிம்பிக்கை இல்லைஎன்றார் அவர்.

இதைத் தொடர்ந்து ஜெயலட்சுமியின் தந்தை அழகி சாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நாளை தனதுவாக்குமூலத்தை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

அழகிரி சாமி தனது வாக்குமூலத்தில் ஜெயலட்சுமியுடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் 6 போலீஸ்அதிகாரிகளின் பெயர், விவர ஜாதகத்தையும் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

முன் ஜாமீன் கோரும் இளங்கோவன்:

இதற்கிடையே ஜெயலட்சுமி விவகாரத்தில் சிக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு தற்போதுதலைமறைவாகியிருக்கும் மதுரை திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன் முன் ஜாமீன் வங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலட்சுமியுடன் குஜால் குடித்தனம் நடத்திய இந்த இளங்கோவன், ஜெயலட்சுமிக்கும் உயர் போலீஸ்அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்தி தனது அக்காள் மகளுக்கு போலீஸ் வேலை வாங்க முயன்றார்.இதற்காக ஜெயலட்சுமியிடம் ஒரு லட்சத்தை இளங்கோவனின் சகோதரி கொடுத்துள்ளார்.

ஆனால், ஜெயலட்சுமியால் வேலை வாங்கித் தர முடியாமல் போகவே, இளங்கோவனும் அவரது உறவினர்களும்சேர்ந்து ஜெயலட்சுமியையும் அவரது தாயார், சகோதரர் ஆகியோரைக் கடத்திச் சென்று அடித்து உதைத்துகொடுமைப்படுத்தினர்.

இது குறித்து மதுரை நீதிமன்றத்துக்கு தந்தி அனுப்பினார் ஜெயலட்சுமியின் தந்தை அழகிரி சாமி. இதன் பின்னர்தான் ஜெயலட்சுமிக்கும் போலீசாருக்கும் உள்ள தொடர்புகள் குறித்த விவகாரமே வெளிச்சத்துக்கு வந்தது.இதனால் போலீசாரின் காமலீலை விவகாரத்தில் முக்கியமான ஆள் இந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.

விவகாரம் சந்திக்கு வந்து நாறியதையடுத்து பணி இடை நீக்கம் செய்யப்பட்ட இளங்கோவனைக் கைது செய்யசிவகாசி போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவாகி விட்டார். தற்போது முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில்,

ஜெயலட்சுமியின் தந்தை அழகிசாமி கொடுத்த புகாரின் பேரில் என் மீதும் மேலும் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும்இரண்டு ஏட்டுக்கள் மீது மாரனேரி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அழகிரி சாமியின் மகன் சீனிவாசன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை நாங்கள் கடத்தியதாக புகாரில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மாரனேரி காவல் நிலையத்தில் ஆஜரான சீனிவாசன், தன்னைக் கடத்தியதுநான்கு பேர் கும்பல் என்று கூறியுள்ளார். அந்தக் கும்பலில் நான் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் குற்றவாளிகள் பட்டியலில் எனது பெயரையும் மாரனேரி போலீஸார் சேர்த்துள்ளனர். திடீர் நகர்காவல்நிலையத்தில் நான் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். ஜெயலட்சுமி விவகாரத்தில் நான் தவறுதலாகசேர்க்கப்பட்டுள்ளேன் (அடடே !).

எனது மைத்துனர் முருகவேலை (இவர் தனது மகளுக்கு போலீஸ் வேலை வாங்க ஜெயலட்சுமியிடம் பணம்தந்தவர்) ஏமாற்றியவர் ஜெயலட்சுமி. இப்போது என்னையும் மோசடி வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறார். நான்நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடப்பேன். எனவே இந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டால் ஜாமீனில்வெளியே வர உத்தரவு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார் இளங்கோவன்.

இதற்கிடையே, தன்னை கைது செய்தால் ஜாமீனில் விடுதலை செய்ய வகை செய்யும் வகையில் முன் ஜாமீன்வழங்கக் கோரி மேலும் 2 மனுக்களை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் ஜெயலட்சுமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X