திமுகவின் சவாலை எதிர்கொள்ளத் தயார்: பாஜக
சென்னை:
திமுகவின் எத்தகையை எதிர்ப்பையும் பாஜக எதிர்கொள்வது என அக் கட்சியின் தமிழக நிர்வாகிகள் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அகில இந்தியபொதுச் செயலர் இல.கணேசன், மாநில செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எச்.ராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 30-ம் தேதி நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் தேர்தல் தோல்வி காரணமாகவேநாடாளுமன்றத்தில் பாஜக குழப்பம் விளைவிப்பதாகவும், இதைக் கண்டித்து சென்னையில் வருகிற 7-ம் தேதிபொதுக் கூட்டம் நடத்தப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக இருந்தபோது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர்ந்து 14நாள்களுக்கு நாடாளுமன்றத்தை இயங்க விடாமல் பாதிப்பு ஏற்படுத்தினர். அப்போது அவர்களை எதிர்த்து திமுகஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?
திமுக-வின் இந்த இரட்டை வேடத்தை பாஜக மக்களிடம் எடுத்துரைக்கும். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக திமுகதலைவர் கருணாநிதி ஒரு நாள் கூட சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பாஜக-வின்நடவடிக்கைகளை விமர்சிக்க எந்த வித தார்மிக உரிமையும் இல்லை.
பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் முன்பு, சட்டசபைக்கு செல்லாததற்கு மக்களிடம் கருணாநிதி மன்னிப்புகேட்டுவிட்டு, இனி தொடர்ந்து சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வேன் என்று உறுதி கூற வேண்டும்.
திமுக-வின் பாஜக எதிர்ப்பு, தன்னுடைய கூட்டணிக் கட்சிகளைச் சிதறவிடாமல் பாதுகாத்துக் கொள்ளமேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அக்கட்சியின் எதிர்ப்பை எதிர்கொள்ள பாஜக தயார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications