திமுகவுக்கே முழு பொறுப்பு உண்டு: ஜெ
சென்னை:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை தாமதப்படுத்தும் முயற்சியாக கர்நாடக அனைத்துக் கட்சியினர் நடந்துகொள்வதைத் தடுத்து, தமிழகத்திற்குரிய நீரைப் பெற்றுத் தர வேண்டிய முழுப் பொறுப்பும் திமுக தலைமையிலானகூட்டணிக் கட்சிகளுக்கே உண்டு என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று கர்நாடக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளதற்கும் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியிலும், கர்நாடகத்திலும் திமுக முக்கியக் கட்சியாக இடம் பெற்றுள்ளகூட்டணியின் ஆட்சியே நடந்து வருகிறது. எனவே கர்நாடக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை தடுத்து நிறுத்தி தமிழகத்திற்குரிய நீரைப் பெற்றுத் தர வேண்டிய மிகப் பெரியபொறுப்பு திமுக கூட்டணிக கட்சிகளுக்கு உண்டு.
இந்தக் கடமையிலிருந்து திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் தவறினால், காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை ஒருபோதும் மதிக்காத கர்நாடக அரசு, இப்போது இறுதித் தீர்ப்பைதாமதப்படுத்தி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் நோக்கத்துடன், நடுவர் மன்றத்தைக் கலைக்கவேண்டும் என்று கோரியுள்ளது. இதைத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு முதல்வர் ஜெயலிலதா கூறியுள்ளார்.