விபச்சாரம்: எல்ஐசி பெண் ஏஜெண்ட் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விபச்சாரத்தில் ஈடுபட்ட வந்த எல்.ஐ.சி.பெண் முகவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வருபவர் லலிதா (40). இவர்விபச்சாரத்துக்காக ஒரு வாடிக்கையாளரை அழைத்துச் சென்றபோது போலீசார் கைது செய்தனர்.

லலிதாவை விசாரித்தபோது, இரண்டு விபச்சார இடங்கள் குறித்த தகவல்கள் போலீசாருக்குக் கிடைத்தன. அதன்அடிப்படையில் சென்னை அண்ணாநகர் எச் பிளாக்கில் ஆங்கிலோ இந்திய பெண்மணி ஒருவருக்குச் சொந்தமானவீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிஷா (29) என்ற பெண்ணும், அவரது ஏஜெண்ட் எட்வின்(40) என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விபச்சாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த டீனா (22)என்ற பெண்ணையும் போலீசார் மீட்டனர்.

இதனையடுத்து திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ப்ரியா (21) என்றஇளம் பெண்ணையும், அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஜாக்குலின் (33) என்ற ஆங்கிலோ இந்தியப்பெண்ணையும், அவரது கணவர் சார்லியையும் (35) போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+