கொழும்பு கப்பல் சர்வீஸ்: ஜெவுக்கு பிரதமர் பதில்
சென்னை:
தூத்துக்குடி- கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து முதல்வர்ஜெயலலிதா எழுதிய ஆட்சேபக் கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அனுப்பியுள்ளார்.
தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்தைத் துவக்கினால் விடுதலைப் புலிகள் தமிழகத்தில்ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கே பிரச்சனை ஏற்படும் என்றும்,இதனால் இத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம்எழுதியிருந்தார்.
இதற்குப் பதிலளித்து பிரதமர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டபின்னரே இந்தக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது குறித்து யோசிக்கப்படும் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இதற்கிடையே கேரளத்தில் இருந்து கொழும்புவுக்குக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குமாறு அம்மாநில அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் இருந்தே கப்பல் போக்குவரத்தைத் துவக்க வேண்டும் என திமுக, மதிமுக, பா.ம.கஉள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. இவர்களது நெருக்குதலுக்குப் பணிந்து மத்திய அரசு கப்பல்போக்குவரத்தைத் தொடங்கிவிடக் கூடாது என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர்ஜெயலலிதா கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications