கருணாநிதியின் கடமை இது: பாஜக
சென்னை:
கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து திமுக தலைவர் கருணாநிதி குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றுதமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றுகர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது மத்தியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்தகூட்டணியில் திமுக தான் முக்கியக் கட்சியாக உள்ளது. எனவே கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து தமிழக விவசாயிகளுக்கு கருணாநிதி உதவியிருப்பார் என்றுஎதிர்பார்த்தோம்.
ஆனால், இதுவரை அத்தகைய நடவடிக்கையில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இறங்கவில்லை. எனவேஇனியாவது சுறுசுறுப்புடன் செயல்பட்டு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோரை சந்தித்து தமிழக விவசாயிகளைக் காக்கும் வேலையில் கருணாநிதி ஈடுபட வேண்டும். அந்தக் கடமைஅவருக்கு உண்டு என்றார்.