தீவிரவாதிகளின் பிடியில் 200 ரஷ்ய குழந்தைகள்
பெஸ்லன் (ரஷ்யா):
ரஷ்யாவில் பள்ளி ஒன்றில் நுழைந்த செசன்ய தீவிரவாதிகள் சுமார் 200 குழந்தைகள், ஆசிரியர்கள்உள்பட 400 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
குழந்தைகளை உடனே விடுவிக்க வேண்டும் என அவசரமாய் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின்பாதுகாப்பு கவுன்சில் தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பெஸ்லன் என்ற இடத்தில் நேற்று பள்ளிக்குள் நுழைந்த 17 தீவிரவாதிகள் குழந்தைகள்,ஆசிரியர்களை சிறைப் பிடித்தனர்.
இரு வாரங்களுக்கு முன் இரு ரஷ்ய விமானங்களை நடுவானில் குண்டு வைத்துத் தகர்த்ததீவிரவாதிகள், நேற்று முன் தினம் ஒரு ரயில் நிலையத்தில் குண்டு வைத்தனர். இந் நிலையில் பள்ளிக்குழந்தைளை சிறைப் பிடித்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து செசன்யாவைப் பிரித்துத் தனி நாடாக்கக் கோரி தீவிரவாதிகள் போராட்டம்நடத்தி வருகின்றனர். இந் நிலையில் ரஷ்ய ஆதரவாளர் ஒருவர் முறைகேடான தேர்தல் மூலம் அந்நாட்டு அதிபராக்கப்பட்டுள்ளார்.
இதனால் ரஷ்யா மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே, பள்ளிக் குழந்தைகளைப் பத்திரமாக மீட்க தீவிரவாதிகளுடன் ரஷ்யா பேச்சு நடத்தஆரம்பித்துள்ளது. இந் நிலையில் கூடிய ஐ.நா. பாதுகாப்பு சபை, பள்ளிக் குழந்தைகளை உடனேவிடுவிக்குமாறு செசன்ய தீவிரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.