தண்டவாளத்தில் பெரிய விரிசல்: வைகை தப்பியது
திருச்சி:
தண்டவாளத்தில் பெரிய விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், ஒரு இளைஞரின் துரிதமான செயலால்,அதில் பயணித்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது.
அரியலூர்- விருத்தாசலத்தின் இடையே அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது தூரத்தில் ஒருவாலிபர் கையில் சிவப்புத் துணியை ஆட்டியபடி ஓடி வந்தார். இதைக் கண்ட டிரைவர் ரயிலின்வேகத்தைக் குறைத்தார்.
இதையடுத்து ரயில் பாலத்துக்கு சற்று முன்னதாக அந்த ரயில் நின்றது. அநத் வாலிபரிடம் ரயிலின்டிரைவர் விசாரித்தபோது, பாலத்தில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து டிரைவர் அங்கு சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய விரிசல்இருப்பதைக் கண்டு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து பொறியாளர்களுடன்வந்த அதிகாரிகள் விரிசலை சரி செய்தனர்.
இளைஞரின் சமயோஜிதமான செயலால் பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேஅதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு நாச வேலை காரணமா என விசாரிக்கப்பட்டு வருகிறது.