15 பேருக்கு தமிழக அரசின் விஞ்ஞானி விருது
சென்னை:
தமிழக அரசின் சிறந்த விஞ்ஞானி விருது 15 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பாக ஆண்டுதோறும் 15 பேருக்கு சிறந்தவிஞ்ஞானி விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ. 10,000 ரொக்கமும், பாராட்டுச் சான்றிதழும் அடங்கிய இந்தவிருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மக்கள் தொகைப்பெருக்கம் காரணமாக கல்வி, விவசாயம், பொது சுகாதாரம் ஆகிய துறைகள் மோசமான நிலையில் உள்ளன. புதியஅறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அமல்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். அப்போதுதான்இந்த நிலையை மாற்ற முடியும் என்றார்.
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஜெயராஜ் பேசுகையில், சுதந்திரத்திற்குப்பிறகு நாட்டில் உணவு உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், மக்கள் தொகைப் பொருக்கம் 3மடங்கு அதிகரித்துள்ளது.
உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாம் தன்னிறைவை அடைந்துள்ளோம். விவசாயிகளும்,விஞ்ஞானிகளும்தான் இதற்கு முக்கியக் காரணம் என்றார் அவர்.