பிரதமருக்கு வைகோ நன்றி

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 2,000 கோடி நிதியை ஒதுக்கியதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்குமதிமுக பொதுச் செயலாளர் வைகோ நன்றி தெரிவித்தார்.

நெல்லையிலிருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோ இன்று காலை கிளியனூரிலிருந்துதிண்டிவனம் நோக்கி தனது பயணத்தை தொடங்கினார்.

வழியில் ஓமந்தூர் என்ற இடத்திலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுவைகோ பேசினார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்த வைகோ, காவிரி நடுவர்மன்றத்தைக் கலைக்க முயலும் கர்நாடக அரசைத் தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். கர்நாடகத்தின்செயல் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உகந்ததல்ல என்பதால் இதில் மத்திய அரசு தலையிட்டுத் தான் ஆக வேண்டும்என்றார் வைகோ.

இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்துவதாக உறுதியளித்த பிரதமர், வைகோவின் உடல் நிலையையும்கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறுகையில், கடந்த 140 ஆண்டு கால கனவு தற்போது நனவாகவுள்ளது. இந்ததிட்டத்தின் மூலம் தென்னிந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரும் வளர்ச்சியைக் காணும் என்றார்.

முன்னதாக நேற்றிரவு தைலாபுரம் வந்தடைந்த வைகோவை, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்று, பொன்னாடைபோர்த்தினார். பின்னர் வைகோவுக்கும் அவருடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளவர்களுக்கும் ராமதாஸ் தனதுதோட்டத்தின் அருகே தேநீர் விருந்தளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+