சென்னையில் வரலாறு காணாத வெயில் !
சென்னை:
சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த ஆகஸ்ட் மாதம்கடும் வெயில் வாட்டி வருகிறது.
அதே போல வேலூர், திருச்சி, மதுரையிலும் கடும் வெயில் வாட்டி வருகிறது.
வெயில் காலம் முடிந்துவிட்ட நிலையிலும் சென்னை நகரிலும் வேலூரிலும் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில்அடித்து வருகிறது. காலை 6 மணிக்கே வெயில் ஆரம்பித்து விடுகிறது. மாலை 4 மணி வரை கடுமையானவெயிலும், அனல் காற்றும் மக்களை வாட்டி, வதக்கி எடுத்து வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் இந்த அளவுக்கு கொடும் வெயில் அடிப்பது இதுவேமுதல் முறையாகும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தென் மேற்குப் பருவக் காற்று வீசி வெப்பத்தைக் குறைக்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென் மேற்குப் பருவக் காற்றும் மழை தொடங்குவது தாமதமாகி வருகிறது. இதனால் தான்இந்த அளவுக்கு வெயில் கொளுத்துவதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
அதேபோல சென்னை நகரில் கடந்த ஒரு மாதத்தில் வழக்கமாக பெய்திருக்க வேண்டிய 324.7 மி.மீ. மழைஅளவை விட மிக மிக குறைந்த அளவிலான மழையே (155.3 மி.மீ) பெய்துள்ளது.
மே மாதத்தை விட மிகக் கடுமையாக வெயில் அடிப்பதால் சென்னை, திருச்சி, வேலூர் மக்கள் வெறுத்துப்போயுள்ளனர். சென்னையின் நேற்றைய வெப்ப நிலை 38 டிகிரி பாரன்ஹீட். வேலூரில் 39 டிகிரிவெப்பமும் மதுரை, திருச்சியில் 38 டிகிரியும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications