For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இராக்: 3 பிணைக்கைதிகள் இந்தியா திரும்பினர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி :

இராக் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுபட்ட இந்திய பிணைக் கைதிகள் மூவரும் இன்று காலை டெல்லிவந்து சேர்ந்தனர்.

கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி இராக்கில் உள்ள குவைத் லாரி நிறுவனத்தில் டிரைவர்களாக பணிபுரிந்தஅந்தர்யாமி, சுக்தேவ் சிங், திலக்ராஜ் என்ற 3 இந்தியர்கள் உட்பட 7 பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

42 நாட்களுக்கு பிறகு பிணைக் கைதிகள் ஏழு பேரும் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களைவிடுவிக்க குவைத் லாரி நிறுவனம் 4.5 கோடி ரூபாயை தீவிரவாதிகளுக்கு வழங்கியது.

விடுதலைக்குப் பின் இந்தியர்கள் மூன்று பேரும் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்ட னர்.நேற்று இரவு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர்.

இன்று காலை 6.35 மணிக்கு அவர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அகமத் அவர்களை வரவேற்றார்.

முன்னதாக காலை 4.45 மணிக்கு வந்து சேர வேண்டிய விமானம், சுமார் 90 நிமிடங்களுக்கும் மேல் தாமதமாகவந்து சேர்ந்தது. தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்படாததால், விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தஅந்தர்யாமி, சுக்தேவ் சிங், திலக்ராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிறிது பதற்றமாகக் காணப்பட்டனர். விமானம்வந்து சேர்ந்த பின்பு அவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகமத், இது ஒரு சந்தோஷமான தருணம். நமது சகோதரர்களைவரவேற்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். நமது ஒட்டுமொத்த பிரார்த்தனைக்கு கடவுள் செவிசாய்த்திருக்கிறார்.இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

விமானம் தரையிறங்கிய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த திலக்ராஜ் உணர்ச்சிவயப்பட்டவராகக் காணப்பட்டார்.அவர் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் இருந்து நாங்கள் குவைத் சென்றபோது, பாக்தாதிற்குவேலைக்கு அனுப்பப்படுவோம் என்பது எங்களுக்குத் தெரியாது என்றார்.

அந்தர்யாமி கூறுகையில், எங்களது விடுதலைக்காகப் பாடுபட்ட மத்திய அரசுக்கும், அமைச்சருக்கும் மற்றும் அரபுநாடுகளில் உள்ள நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பத்திரிக்கையாளர் சந்திப்புக்குப் பின், அவர்கள் தங்களது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தகுடும்பத்தினரைச் சந்தித்தனர்.

மூன்று பேரும் ஒரு குருத்துவராவுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்யவிருக்கின்றனர்.பின்னர் தங்களது சொந்த கிராமங்களுக்கு மாநில அதிகாரிகளின் பாதுகாப்புடன் செல்கின்றனர்.

மூன்று பேரும் ஒரு குருத்துவராவுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்யவிருக்கின்றனர்.பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்கள். அதனையடுத்து தங்களது சொந்தகிராமங்களுக்கு மாநில அதிகாரிகளின் பாதுகாப்புடன் செல்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X