பெண் குழந்தைகளுக்கு தென்னம்பிள்ளை: ஜெ.
சென்னை:
பெண் குழந்தைகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள்ஒவ்வொன்றிற்கும் தலா 2 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள் இந்ததென்னங்ன்றுகளை குழந்தைகளின் பெற்றோர்கள் அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தென்னங்கன்றுகளை குழந்தைகளின் பெற்றோர் நட்டு வளர்த்து வர வேண்டும். குழந்தை 5 வயதாகஇருக்கும்போது, தென்னை மரங்கள் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். வருடத்திற்கு 100 காய்கள் வரைகொடுக்கும்போது அந்த தேங்காய்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 1000 வரை குழந்தைகளுக்குக் கிடைக்கும்.
பெண் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு இந்தப் பணம் போதுமானதாக இருக்கும். மேலும், ஊரகப் பகுதிகளில்தென்னை மர சாகுபடியை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் உதவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக தென்னை மர தினத்தை முன்னிட்டு இந்தப் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications