பாக். உடன் பேச்சு: வாஜ்பாய்-மன்மோகன் சந்திப்பு
டெல்லி :
இந்திய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான மிக முக்கிய பேச்சுவார்த்தைகள்மீண்டும் தொடங்கவுள்ளதையொட்டி, அதுகுறித்து விவாதிப்பதற்காக முன்னாள் பிரதமர்வாஜ்பாயை பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப்பேசினார்.
காலை உணவு அருந்தியபடியே இருவரும் ஆலோசனை நடத்தினர்.
கார்கில் போருக்குப் பின் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தைநடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவம்பெறுகின்றன.
இந் நிலையில் வாஜ்பாயின் ஆலோசனைகளை மன்மோகன் சிங் கேட்டறிந்தார். சுமார் ஒரு மணிநேரம் நடந்த இச் சந்திப்பின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், பா.ஜ.க. ஆட்சியில்வெளியுறவு அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் உடனிருந்தனர்.
நேற்று நட்வர் சிங், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.வரும் 5ம் தேதி நட்வர் சிங்குக்கும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் கசூரிக்கும்இடையே பேச்சு தொடங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications