பாமகவில் பிளவு: தமிழ் தேசம் கட்சி உதயம்
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த மாவட்ட விவசாய அணித் தலைவராக இருந்த அரசுவிலகி, தமிழ் தேசம் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
பொன்னேரி அருகே உள்ள புலிகுளம் பகுதியைச் சேர்ந்த அரசு, கடந்த 20 வருடங்களாக பாமகவில் இருந்துவந்தார். முதலில் மீஞ்சூர் வன்னியர் சங்கத்தின் ஒன்றிய அமைப்பாளராகவும், பின்னர் பாமகவில் ஒன்றியசெயலாளராகவும் இருந்தார். கடந்த 3 வருடங்களாக மாவட்ட விவசாய அணித் தலைவராகவும் பொறுப்புவகித்தார்.
கடந்த சில மாதங்களாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடுஇருந்து வந்தது. அண்மையில் நடந்த ஒரு ஒரு கூட்டத்தில் அன்புமணிக்கும், இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அரசு, பாமகவில் இருந்து விலகி, தமிழ் தேசம் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.பொன்னேரியில் உள்ள கன்னைய்யா நாயுடு திருமண மண்டபத்தில் நடந்த தொடக்க விழாவில் அரசுகுத்துவிளக்கு ஏற்றி தனது கட்சியைத் தொடங்கினார். இந்த விழாவில் அவரது ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அரசு நிருபர்களிடம் பேசும்போது, பாமக நல்ல பாதையில் செல்லவில்லை. அதனால் தான் அதிலிருந்துவிலகினோம். கெட்டதை யார் செய்தாலு












Click it and Unblock the Notifications