ஜெயலட்சுமி: மேலும் ஒரு போலீஸ் சஸ்பெண்ட்
மதுரை:
சிவகாசி பெண் ஜெயலட்சுமி விவகாரத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தற்காலிக பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலட்சுமி மதுரை உயர்நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் தன்னை சீரழித்தவிவகாரம் குறித்துக் கூறியிருந்தார்.
இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த மதுரை திடீர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், நிலக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இளங்கோவன் தவிர மற்ற 2 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ஜெயலட்சுமியின் பட்டியலில் முக்கியமாக இடம் பெற்றிருந்த இன்ஸ்பெக்டர் மலைச்சாமியும் தற்போது தற்காலிகபணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜெயலட்சுமி விவகாரத்தில் இவர் பெயர் அடிபட்டதும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று இரவு மலைச்சாமியின் மதுரை ஆத்திகுளம் வீட்டில் தற்காலிக பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டது.
ஜெயலட்சுமி சொகுசுக் கார் வாங்குவதற்காக வங்கி ஒன்றில் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகைக்கான கியாரண்டராகமலைச்சாமி கையெழுத்துப் போட்டிருந்தார். மேலும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயலட்சுமியை மிரட்டி, அடைத்துகொடுமைப்படுத்தியதாகவும் மலைச்சாமி மீது ஜெயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார்.
இந்தக் காரணங்களுக்காக மலைச்சாமி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர்மலைச்சாமி, தமிழ்நாடு மின்வாரிய கண்காணிப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications