பொடா நீதிமன்றம் மீது வைகோ குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

Vaiko and Ramadossதன் மீதான பொடா வழக்கை வாபஸ் பெற பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்து குறித்துகருத்துத் தெரிவிக்க வைகோ மறுத்துவிட்டார். அதே நேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே பொடாநீதிமன்றம் தனக்கு எதிரான நிலையையே கடைபிடித்து வருவதாகவும் கூறினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்கையும் வாபஸ் பெறதமிழக அரசுக்கு அனுமதி மறுத்துள்ளார் நீதிபதி ராஜேந்திரன்.

இது குறித்து திண்டிவனத்தில் பாதயாத்திரையில் இருந்த வைகோவிடம் செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது,

ஆரம்பத்தில் இருந்தே பொடா சிறப்பு நீதிமன்றம் (நீதிபதி ராஜேந்திரன்) எனக்கு எதிரானநிலையையே எடுத்து வந்துள்ளது. ஆனால், இப்போதைய அதன் தீர்ப்பு குறித்து நான் எந்தக்கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.

இறுதியில் நீதி நிச்சயம் வெல்லும் என்பதில் எனக்கு இப்போதும் நம்பிக்கை உள்ளது என்றார்.

பொடா நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பீர்களா என்றுகேட்டபோது, என் மீது போடப்பட்ட பொடா வழக்கே தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் நான்தொடர்ந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது என்றார் வைகோ.

பொடா வழக்கில் கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி கைது செய்யப்பட்ட வைகோ கடந்தபிப்ரவரி 7ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 8ம் தேதி தனது தீர்ப்பை வழங்கிய பொடா மறு ஆய்வுக் குழு, வைகோ மீதானவழக்கை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், வழக்கை தமிழக அரசுவாபஸ் பெறவில்லை.

இதையடுத்து வைகோவின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 13ம் தேதிவழங்கிய உத்தரவில், வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஉத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்தே வழக்கை வாபஸ் பெறுவதாக பொடா நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+