சுகன்யா விவாகரத்து வழக்கில் தாயார் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகை சுகன்யா விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது தாயார் பாரதி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடிகை சுகன்யாவுக்கும், அவரது அமெரிக்கக் கணவர் ஸ்ரீதருக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டதையடுத்து சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்தார் சுகன்யா. விசாரணைக்குப்பின்னர் சுகன்யாவுக்கு இந் நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டது.
இந் நிலையில், தன்னிடம் கருத்து கேட்காமலேயே விவாகரத்து வழங்கப்பட்டதை எதிர்த்து சுகன்யாவின் கணவர்குடும்ப நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்தார். இந்த மனு மீது தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இதில் சுகன்யாவின் சார்பில் அவரது தாயார் பாரதி இன்று நீதிபதி சுஷ்மா துரைசாமி முன் ஆஜரானார். பின்னர்இந்த வழக்கு விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications