உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்கள் அதிகாலையில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதம் இருந்த அரசு பள்ளி கம்ப்யூட்டர்ஆசிரியர்கள் 400 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
அரசுப் பள்ளிகளில் 2400 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடப் பிரிவுஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களது ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது.
தங்களை நிரந்தர ஆசிரியர்களாக அதே பள்ளிகளில் நியமிக்குமாறு கோரி பல வழிகளிலும் போராடி வந்தஆசிரியர்கள் கடைசி முயற்சியாக சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
ஆசிரியர்களுடன், அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்களை போலீஸார் திடீரென்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications