உடைக்கப்படும் பிள்ளையார் சிலைகள் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிள்ளையார் சிலைகளை உடைப்பதற்கு மனித உரிமை ஆணையம் எதிர்ப்புதெரிவித்துள்ளது.

சென்னை தி.நகரை சேர்ந்த வீரமணி என்பவர் மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அவர்அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக அண்மைக் காலமாக பெரிய அளவில் பிள்ளையார் சிலைகளைதயாரிக்கிறார்கள். பெரிய சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லும்போது, மின்சாரக் கம்பி மற்றும்தொலைபேசி கம்பிகளில் தட்டுவதால் சிலைகளின் சில பகுதிகளை அதைத் கொண்டு செல்பவர்களேஉடைக்கிறார்கள்.

சிலைகளை தண்ணீரில் கரையாத பொருட்களை கொண்டு தயாரிப்பதால், அவற்றை நீரில் விடும்போது கம்பால்அடித்து உடைக்கிறார்கள். இது போன்ற செயல்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகும். மனித உரிமையைமீறும் செயலாகும் என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சம்பந்தம்,

முன்பெல்லாம் பிள்ளையார் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதால், அவை விரைவில் நீரில் கரைந்து விடும்.ஆனால் இப்போது சிலர் சுய விளம்பரத்துக்காக தண்ணீரில் கரையாத பிளாஸ்டர் ஆப் பாரிஸைக் கொண்டுபெரிய சிலைகளை தயாரிக்கிறார்கள். அந்த சிலைகளை நீரில் விடும்போது, உடைப்பது பக்தர்களின் மதஉணர்வுகளை புண்படுத்துவதாக அமைகிறது.

மேலும் இவ்வாறு சிலைகளை உடைப்பதும் அவற்றின் மீது ஏறி நின்று கொண்டு மாலை அணிவிப்பதும் இந்தியதண்டனை சட்டம் 295 மற்றும் 295 ஏ பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக தனதுபரிந்துரையை உள்துறை செயலாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்குஅனுப்பி இருப்பதாகத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+