புயல் சின்னம்: சென்னையில் திடீர் மழை
சென்னை:
ஆந்திர- தமிழக எல்லையொட்டி வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்டசில வட மாவட்டங்களில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னை மக்களை வாட்டிய வெயில் குறைந்து, மழை பெய்து வருகிறது.
இன்று காலையும் தூறல் தொடர்ந்து கொண்டிருந்தது. இருந்தது. பிற்பகலில் பலத்த மழை பெய்தது.
நுங்கம்பாக்கத்தில் 7 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 8.8. மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
புயல் சின்னம் காரணமாக தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புழல், சோழாவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் வறண்டு வரும் நிலையில்இந்த மழை வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, சென்னைக்குக் குடிநீர் வழங்க கிருஷ்ணா நதியில் இருந்து நீரைத் திறந்துவிடுமாறு ஆந்திர அரசுக்குமுதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கை ஏற்கப்படும் என்று தெரிகிறது. ஸ்ரீசைலம் அணையில் இருந்து 3டி.எம்.சி. நீரைத் திறந்துவிட ஆந்திர அரசு முன் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications