கிரிக்கெட் ஒளிபரப்பு: ஈ.எஸ்.பி.என். வழக்கு
டெல்லி:
இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஜீ டிவிக்கு வழங்க இந்திய கிரிக்கெட்வாரியம் முடிவெடுத்திருப்பதை எதிர்த்து ஈ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப்பெற "ஜீ டிவி நிறுவனம் ரூ.1,200 கோடி ரூபாயையும், ஈ.எஸ்.பி.என்-ஸ்டார் "டிவி நிறுவனம் 1,060 கோடிரூபாயையும் தர முன்வந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒளிபரப்பு உரிமையை வாங்க ரூ.1,500 கோடிரூபாயை நிர்ணயித்தது.
இதை இரு டிவி நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டன. இருப்பினும் ஒப்பந்தப் படிவத்தில் ஜீ டிவி அதிக தொகைகுறிப்பிட்டிருந்ததால், அதற்கே முன்னுரிமை அளித்து ஒளிபரப்பு உரிமை வழங்கப் போவதாக கிரிக்கெட் வாரியத்தலைவர் ஜக் மோகன் டால்மியா தெரிவித்தார்.
இந்த முடிவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஈ.எஸ்.பி.என்- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழக்குதொடர்ந்துள்ளது. இது குறித்து அந் நிறுவனத்தின் மேலாளர் ரிக் டோவே கூறுகையில்,
இது துரதிர்ஷ்டவசமான முடிவு. இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்திருக்கும் விதிகளைப் பூர்த்தி செய்வதில் எங்கள்நிறுவனம் தான் முதலிடம் வகிக்கிறது. ஆனால் வாரியம் இப்போது விதிகளை மாற்றி விட்டு, எங்களதுபோட்டியாளருக்குச் சாதகமாக முடிவு எடுத்துள்ளது. வேறு வழியின்றி நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்என்றார்.
ஈ.எஸ்.பி.என். சாப்ட்வேர் நிறுவனத்தின் மேலாளர் வெங்கடேஷ் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைஒளிபரப்புவதில் அனுபவமற்ற ஜீ டிவி நிறுவனம், ஒளிபரப்பு உரிமையை பெறுவதற்கான தகுதியைப் பெறவில்லை.ஆனால் கிரிக்கெட் வாரியம் விதிமுறைகளை மாற்றி, அந் நிறுவனத்திற்கு உரிமை வழங்க முடிவெடுத்துள்ளதுஎன்றார்.
இந் நிலையில் ஈ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்ந்த வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜீ டிவிக்கு ஒளிபரப்பு உரிமையை வழங்கியது தொடர்பானஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உத்தரவிட்டனர். பின்பு வழக்கை வரும் 9ம் தேதிக்குஒத்திவைத்தனர்.