போட்டோ: அமைச்சர்கள் ராஜ்பவன் வர உத்தரவு
சென்னை:
கவர்னர் மாளிகையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுடன் அனைத்து அமைச்சர்களும் குரூப்போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக அனைத்து அமைச்சர்களும் காலை 11 மணிக்குராஜ்பவனில் ஆஜராக வேண்டும் என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கமாக அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது உடனே ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள்கொண்ட குரூப் போட்டோ எடுக்கப்படுவது வழக்கம். ராஜ்பவனுக்கு வெளியே உள்ள புல்வெளியில் இந்த குரூப் போட்டோ எடுக்கப்படும்.
ஆனால், கடந்த சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது புதிய அமைச்சர்கள் இரவில்பதவியேற்றனர். இதனால் இந்த சம்பிரதாயமான குரூப் போட்டோ எடுக்கப்படவில்லை.
இதனால் இன்று இந்த போட்டோ செசன் நடக்கிறது.
கவர்னர் ராம்மோகன் ராவ் மாற்றப்படலாம் என்ற கூறப்படும் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவும்வெளிநாட்டு சிகிச்சைக்குச் செல்லக் கூடும் என்ற சூழ்நிலையில் இந்த குரூப் போட்டோவுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.