ஜெயலட்சுமியின் சொத்துக்கள்: டிஜிபிக்கு கடிதம்
மதுரை:
ஜெயலட்சுமியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழககாவல்துறை தலைவருக்கு, ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவை நகைப்பட்டறை அதிபர் முருகவேலின் தாயார் முத்துலட்சுமி கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜெயலட்சுமி விவகாரம் விஸ்வரூபமெடுத்ததைத் தொடர்ந்து, அவரைக் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்மதுரை திடீர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர் முருகவேல் கைது செய்யப்பட்டார். அவருடன்சேர்த்து 2 போலீஸாரும் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் ஜெயலட்சுமிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் தீவிரமாக இறங்கிய முருகவேல் மற்றும்காவலர்களின் வழக்கறிஞர்கள், தற்போது ஜெயலட்சுமிக்கு எதிரான வழக்குகளை தீவிரப்படுத்த முடிவுசெய்துள்ளனர்.
முதல் கட்டமாக ஜெயலட்சுமி சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் குறித்து விசாரிக்க டிஜிபிக்கு கடிதம் எழுத முடிவுசெய்யப்பட்டுள்ளது. முருகவேலின் தாயார் முத்துலட்சுமி மூலமாத டிஜிபி நடராஜனுக்கு எழுதப்பட்டுள்ள கடிதம்குறித்து முருகவேலின் வழக்கறிஞர் காந்தி கூறியதாவது:
எனது மகன் முருகவேல் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அனைவர் குறித்தும் தீவிரவிசாரணை நடத்தப்பட வேண்டும்.
அந்த நபர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள், ஜெயலட்சுமிக்கு எதிரான சாட்சியங்களை கலைக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும்.
தற்காலிக பணி நீக்கம் நீக்கம் செய்யப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியின் தூண்டுதலின் பேரில்தான், மற்றகாவல்துறை அதிகாரிகள் மீது ஜெயலட்சுமி புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் காவல்துறைஅதிகாரி, ஜெயலட்சுமியின் தந்தை அழகிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்துதீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜெயலட்சுமி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது மோசடியான செயல்களின் மூலம்சேர்த்துள்ளார். இதுகுறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாகமுருகவேலின் வழக்கறிஞர் காந்தி கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜெயலட்சுமி மீது 3க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளைப் பதிவு செய்வதில் வெற்றி பெற்றுவிட்டகாவல்துறையினர் அவரைக் கைது செய்வதில் தீவிரமாக உள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications