பொடா: ஜெவுக்கு சட்டீஸ்கர் மாநில முதல்வர் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்க்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டீஸ்கர் மாநிலபா.ஜ.க. முதல்வர் டாக்டர் ரமண் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பொடா ரத்தை எரித்த்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடந்த மாதம் 24ம் தேதி கடிதம்எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்திற்கு பதிலளித்து டாக்டர் ரமண்சிங் எழுதியுள்ள கடிதத்தில், பொடா விஷயத்தில் மத்திய அரசின்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன்.
பொடா சட்டம் வாபஸ் பெறப்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
அதே போல, முதல்வர் ஜெயலலிதாவின் கடிதம் வந்திருப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ்பாட்டச்சார்யா ஒரு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications