என்னால் தான் வந்தது சேது சமுத்திர திட்டம்: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு என்னுடைய முயற்சிதான் முக்கியகாரணம், இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட யாரும் உரிமை கோர முடியாது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சேது சமுத்திரத் திட்டத்தில் வைகோ உரிமை கொண்டாடுவது விந்தையாக இருக்கிறது. பல்வேறு காலக்கட்டங்களில் நானும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் இத் திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம்பலமுறை வலியுறுத்தி வந்தோம்.

1998ம் ஆண்டு பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இருந்தபோது, இது குறித்து செயல்திட்டம்வகுப்பதற்காக ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நான் மட்டும் கலந்துகொண்டேன். கூட்டணியில் அங்கம் வகித்த வைகோவுக்கும், பாமகவும் அழைப்பே அனுப்பப்படவில்லை.

அழைப்பு இல்லாவிட்டாலும் பாமக நிறுவனர் ராமதாசும், தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடிராமமூர்த்தியும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர். அவர்களை அப்போதைய பிரதமர் வாஜ்பாயின்இல்லத்திற்குள் நுழைய காவலர்கள் அனுமதிக்கவில்லை. பின்பு எனது வேண்டுகோளின் பேரில் அவர்களைகூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்டாலும் இறுதி வரை அவர்கள் வாயே திறக்கவில்லை. நான் மட்டுமே சேது சமுத்திரத்திட்டத்திற்கு ஆதரவாக வலிமையான ஆணித்தரமான ஆதாரங்களை ஒன்றரை மணி நேரம் நான்எடுத்துரைத்தேன். எனவே இத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்தற்கு முக்கிய காரணம் நான்மேற்கொண்ட முயற்சிகள் தான் என்பதை என்னால் 100 சதவீதம் அறுதியிட்டுக் கூறமுடியும்.

உண்மை இவ்வாறு இருக்க, சேது சமுத்திரத் திட்டம் அமலாக்கப்படவுள்ளதற்கு நான் தான் காரணம் என்று வைகோகூறிக் கொள்வது விந்தையாக உள்ளது. வைகோவின் இந்தச் செயல் குழந்தைத்தனமானது என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+