ரசாயான பூச்சு விநாயகர் சிலைகளுக்குத் தடை
சென்னை:
ரசாயனப் பூச்சு கொண்ட பெரிய விநாயகர் சிலைகளை கடல், ஆறு, குளங்களில் கரைக்க சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ரசாயனப் பூச்சு கொண்ட பெரிய விநாயகர் சிலைகளை கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்க எதிர்ப்புதெரிவித்து சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் என்ற வழக்கறிஞர் பொது நலன் மனுவை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்தார்.
தனது மனுவில், ரசாயனப் பூச்சு கொண்ட பெரிய விநாயகர் சிலைகளை கடல், ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதன் மூலம் நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. எனவேபெரிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் கடல்,ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் ரசாயனப்பூச்சு கொண்ட பெரிய விநாயகர் சிலைகளை கரைக்க இடைக்காலத்தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேசமயம், பெரிய விநாயகர் சிலைகளை அடித்து, உடைத்து கரைக்கும் செயல் இந்துக்களின் மனதைப்புண்படுத்தும் விதமாக உள்ளது, இதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.