ஒரே நாளில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை
வேலூர் & தூத்துக்குடி:
வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல, தூத்துக்குடியில்9 பேருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
வேலூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் பகுதியில் கடந்த 2000மாவது ஆண்டு பன்னீர் என்பவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரத்தினசாமி என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள்உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலா அனைவருக்கும்ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார்.
இதேபோல, ஊர்ப்பணம் குறித்து கணக்கு கேட்டதற்காக கடந்த 1995ம் ஆண்டு கோபால் என்பவர் தூத்துக்குடிஅருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்.