ஜெயலட்சுமி: கருப்பு புடவையில் போராட்டம்
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி மதுரையில் பெண்கள் அமைப்பினர்கருப்புப் புடவை அணிந்து போராட்டம் நடத்தினர்.
ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் பட்டியல் காக்கிச் சட்டைகளில் ஆரம்பித்து கரைவேட்டிகள், தொழிலதிபர்களில் போய் நிற்கிறது.
கைதுகள், சஸ்பெண்டுகளும் கூடவே சஸ்பென்ஸ்களும் தொடர்ந்து வருகின்றன.
இந் நிலையில் ஜெயலட்சமி விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் தான் முழு உண்மை வெளி வரும்என்று பலரும் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளது. இக் கோரிக்கையை முன் வைத்து இன்றுமதுரையில் பெண்கள் அமைப்பினர் கருப்புப் புடவை கட்டி போராட்டம் நடத்தினர்.
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த பெண்கள், அதன் தலைவிகாமேஸ்வரி தலைமையில் மதுரை காளவாசல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலட்சுமி விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவர் மீதும் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். ஜெயலட்சுமி வழக்கை பாரபட்சமின்றி நடத்த வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications