மே. வங்க முதல்வரை கொல்ல முயற்சி
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவை கண்ணி வெடி மூலம் கொல்ல முயன்றதீவிரவாதிகளின் சதியை பொது மக்களின் உதவியுடன் போலீஸார் முறியடித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவைக் கொல்ல மக்கள் போர் படைமற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரவாத அமைப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாகஅவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் பீடித் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தில் பட்டாச்சாரியா கலந்து கொள்ளவிருந்தார். இக் கூட்டத்திற்கு வரும் முதல்வரைக் கொல்ல மக்கள்போர்ப்படையினர் சாலையில் கண்ணி வெடி புதைத்தனர்.
அதைப் பார்த்துவிட்ட சில பொது மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த போலீஸார்,வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சோதனையிட்டபோது புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 கண்ணி வெடிகள் சிக்கி.உடனடியாக உடனடியாக அவை அகற்றப்பட்டன.
பட்டாச்சாரியாவின் பாதுகாப்பு வாகனங்கள் அந்த வழியாக வருவதற்கு சற்று முன்பு இந்த கண்ணி வெடிகள்அகற்றப்பட்டன. இதனால் பட்டாச்சாரியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.