For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமி: முருகவேல் ஜாமீன் மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jayalakshmiபோலீஸ் புகழ் ஜெயலட்சுமி குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நகைக் கடை உரிமையாளர்முருகவேலின் ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

ஜெயலட்சுமியின் தாய் திருவேங்கடத் தாயார், சகோதரர் சீனிவாசன், மகள் அபிநயா, மகன் கோகுல் ஆகியோரைசிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் இருந்து கடத்திய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டுகண்ணன், முருகவேல், கார் டிரைவர் அழகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகவேல், ஜெயலட்மி வழக்கில் தேடப்பட்டு வரும் மதுரை திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின்மைத்துனர் ஆவார்.

இவர் தன்னை ஜாமீனில் விடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,என்னுடைய கடையில் நகை வாங்கியதற்கு பணம் தருவதில் இருந்து தப்பிப்பதற்காக ஜெயலட்சுமியும் அவரதுதந்தை அழகிரிசாமியும் நாடகம் ஆடுகின்றனர் என்று கூறியிருந்தார்.

அரசு சார்பில் தரப்பில், முருகவேல் மீது சட்ட விரோதமாக கூடுதல் (சட்டப் பிரிவு 147), ஆள் கடத்தல் (365),மிரட்டுதல், திருட்டு (379) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அழகிரிசாமி வீட்டில் இருந்துஅவர் எடுத்துச் சென்ற நகைககள் இன்னும் மீட்கப்படவில்லை. மேலும் விசாரணை ஆரம்பக் கட்டத்தில்இருக்கிறது. எனவே, அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்று கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மாசிலாமணி,ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X