காலையில் "சுள்" வெயில், மாலையில் கன மழை!
சென்னை:
சென்னை நகரில் நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று காலை நல்ல வெயில் அடித்தது. ஆனால் மாலையில் கனமழை பெய்து சென்னை மக்களை குஷிப்படுத்தியது.
வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த நான்கு நாட்களாகவெயில் குறைந்து நல்ல மழை பெய்து வந்தது. இருப்பினும் புயல் சின்னம் வலுவிழுந்ததால், மழை நின்றது.
நேற்று காலை முதல் வழக்கம் போல சுள்ளென்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. மழை அவ்வளவுதானா என்றுமக்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் பிற்பகலுக்கு மேல் நிலைமை மாறியது.
மாலை 3 மணிக்கு சென்னையின் பல பகுதிகளிலும் கன மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. அதன் பிறகு நின்ற மழை பின்னர் இரவு 8 மணிக்கு மேல் மீண்டும் தொடர்ந்தது. இரவு முழுவதும்நல்ல மழை பெய்ததால் சென்னை நகர் மீண்டும் குளுமை அடைந்தது.
இன்றும் மாலையில் மழை பெய்யலாம் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications