மாணவி மானபங்கம்: ஆசிரியருக்கு 22 ஆண்டு சிறை
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே பள்ளி மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துநாகை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள குரவாப்புலம் என்ற ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம்என்பவரின் மகள் விஜிலா(16). கடந்த 2001ம் ஆண்டு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த ராஜரத்தினம்(48) என்பவர் விஜிலாவை கற்பழித்தார்.இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதோடு, தனது கற்பழிப்பைதொடர்ந்துள்ளார். இதில் விஜிலா கர்ப்பமடைந்தார்.
இதனயைடுத்து விஜிலாவின் தந்தை அளித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸார் ராஜரத்தினத்தை கைதுசெய்தனர். அதே நேரத்தில் கர்ப்பத்தை கலைக்க விஜிலாவின் அண்ணனிடம் ரூ.30,000 பணத்தை ராஜரத்தினம்தரப்பினர் கொடுத்தனர். பின்னர் விஜிலாவின் கர்ப்பம் கலைக்கப்பட்டது.
கர்ப்பம் கலைக்கப்பட்ட பின்னர் ராஜரத்தினம் அடியாட்களை அனுப்பி, மிரட்டி பணத்தை திரும்பப் பறித்துள்ளார்.
இந் நிலையில் கற்பழிப்பு வழக்கு நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி ஜனார்தன் ஞானையா, மாணவியை பலவந்தமாகக் கற்பழித்த ராஜரத்தினத்திற்கு 20 ஆண்டுசிறை தண்டனை, கொலை மிரட்டலுக்காக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்துதீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications